Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரகுராம் ராஜன் மாற்றம்: பதில் அளிக்க மறுத்த அருண் ஜெட்லி

Webdunia
செவ்வாய், 31 மே 2016 (12:07 IST)
கடந்த சில நாட்களாக ரகுராம் ராஜனுக்கு எதிராக பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி புயலை கிளப்பி வருகிறார்.


 
 
ரகுராம் ராஜனை உடனடியாக ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்ம் எனவும், அவரது பதவிக் காலத்தை மீண்டும் நீடிக்க கூடாது எனவும் வலியுறுத்தி வரும் சுப்பிரமணியன் சுவாமி, ரகுராம் ராஜன் மீது தனிப்பட்ட விமர்சனத்தை வைத்து வருகிறார்.
 
இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்த மத்திய நிதியமைச்சர் நேற்று இது குறித்து பேசினார். அப்போது, விமர்சனம் என்பது கொள்கைகள் மற்றும் கருத்துக்கள் மீது தான் இருக்க வேண்டுமே தவிர தனி நபர்களின் மீது இருக்கக் கூடாது என்றார்.
 
இது போன்ற விமர்சனங்கள் யாரிடம் இருந்து வந்தாலும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏனெனில் ரிசர்வ் வங்கி மற்றும் அதன் ஆளுநரும் இந்திய பொருளாதாரத்தின் முக்கிய நிறுவனம் ஆகும் என்று கூறினார். ஆனால் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைய இருக்கும் ரகுராம் ராஜனின் பதவிக் காலத்தை நீட்டிப்பது குறித்த கேள்விக்கு பதிலளிக்க அருண் ஜெட்லி மறுத்துவிட்டார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments