Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி ஒரு கோமாளி இளவரசர்: நிதியமைச்சர் அருண்ஜெட்லி விமர்சனம்

Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2018 (22:46 IST)
பாராளுமன்ற தேர்தல் இன்னும் ஒருசில மாதங்களில் வரவுள்ள நிலையில் தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் ஒருவரை ஒருவர் ஆக்ரோஷமாக கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி குறித்து காங்கிரஸ் கட்சியினர்களும், ராகுல்காந்தி குறித்து பாஜகவினர்களும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார், இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவு செய்துள்ள அருண்ஜெட்லி, 'ரஃபேல் போர் விமானங்கள் வாங்கிய விவகாரம், 15 பெரு நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறும் விவகாரம் என அனைத்திலும் ராகுல் காந்தி பொய்யையே கூறிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு கோமாளி இளவரசர் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி விமர்சித்துள்ளார். அருண்ஜெட்லியின் இந்த விமர்சனத்திற்கு காங்கிரஸார் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments