Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடும் ரயிலில் பெண்ணின் அங்கங்களை தொட்டு கழிவறைக்கு அழைத்த சட்டமன்ற உறுப்பினர்!

Webdunia
ஞாயிறு, 24 ஜூலை 2016 (10:56 IST)
ஓடும் ரயில்லில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணின் அங்கங்களை தொட்டதோடு, அந்த பெண்ணை ரயில் கழிவறைக்கு அழைத்த பீகார் சட்டமேலவை பாஜக உறுப்பினர் ரயில்வே காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.


 
 
பீகார் மாநிலம் சட்டமேலவை உறுப்பினர் துன்னா பாண்டே. பூர்வாஞ்சல் விரைவு ரயிலில் பயணம் செய்த இவர், துங்கிக்கொண்டிருந்த பெண்ணின் அங்கங்களை தொட்டு சில்மிஷம் செய்துள்ளார். மேலும் அந்த பெண்ணை ரயில் கழிவறைக்கும் அழைத்ததாக கூறப்படுகிறது.
 
இதனையடுத்து அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் நேற்று இரவு அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் போது அவர் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. பீகாரில் மதுவிலக்கு அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
நான் செல்போன் சார்ஜரை எடுக்க முயன்றபோது அந்த பெண் மீது தவறுதலாக கை பட்டுவிட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள துன்னா பாண்டே இன்று நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுகிறார். இந்நிலையில் அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது பாஜக. இந்த விவகாரம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று லட்சம் பேர்களுக்கு பதவி.. விஜய் முடிவால் தமிழகத்தில் பரபரப்பு..!

பிளஸ் 2 மாணவன் ஓட்டிய கார் விபத்து.. காஞ்சிபுரம் மூதாட்டி பரிதாப பலி..!

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் ஹிந்தி சான்றிதழ் வகுப்பு படிக்கிறார்கள்: ஆர் எஸ் எஸ் தகவல்

இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்! காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்த மீனவர்கள்!

திமுக, பாஜக இரண்டு கட்சிகளுக்கும் புரிதல் இருக்கிறது: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments