Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் மாற்று ஆவணங்களை கொண்டு வாக்களிக்க ஏற்பாடு

Sinoj
சனி, 23 மார்ச் 2024 (22:49 IST)
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 12 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம்  என்று தெரிவித்துள்ளது.

18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று  தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்  அறிவித்தார்.
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
இந்த நிலையில் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக  உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த நிலையில், வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் மாற்று ஆவணங்களை கொண்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாவது: 
 
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 12 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம்  என்று தெரிவித்துள்ளது.
 
அதன்படி, ஆதார் அட்டை, தேசிய ஊரக வேலை  உறுதியளிப்பு திட்ட பணி அடையாள அட்டை, புகைப்படிவத்துடன் கூடிய வங்கி / அஞ்சல் புத்தகம், ஓட்டுனர் உரிமம், பேன் கார்டு, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், எம்பி/ஏம்.எல்.ஏக்களின் அடையாள அட்டை உள்ளிடவற்றில் ஏதேனும் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவாளி ஜோதிக்கும், கேரள முதல்வர் மருமகனுக்கும் தொடர்பா? பாஜக பகீர் குற்றச்சாட்டு..!

சிலிண்டர் விலை குறைவு என அறிவிப்பு.. ஆனாலும் தாய்மார்கள் அதிருப்தி..!

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. 10வது முறையாக கூறும் டிரம்ப்.. நம்பத்தான் ஆளில்லை..!

குடும்பத்தோடு தலைமறைவாவேன், அல்லது உயிர் துறப்பேன்: வருத்தத்துடன் கூறிய ஜிகே மணி..!

இந்திய ஜெட் விமானம் வீழ்த்தப்பட்டதா? மறைமுகமாக பதில் கூறிய முப்படை தலைமை தளபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments