Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல் ? – ராணுவம் குவிப்பு !

Webdunia
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (14:12 IST)
காஷ்மீரில் ஜெய்ஷ் முகமது அமைப்பை சேர்ந்த ஐந்து பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக வந்த தகவலை அடுத்து அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியில் இருந்து இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதிக்குள் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஐந்து பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக மத்திய அரசுக்குக் கிடைத்த தகவலை அடுத்து அங்கு ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் இருக்கும் பாதுகாப்புப் படையினர் முழு எச்சரிக்கையுடன் இருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. காஷ்மீரின், நுழைவு மற்றும் வெளியேற்ற பாதைகளில் ஆயுதம் ஏந்திய துணை ராணுவப் படையினர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர். 

இதுவரை அங்கு சுமார் 10,000 பாதுகாப்பு படையினர் காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதைவிட மும்மடங்குப் படை கொண்டுவரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் வகையில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.விரைவில் சுதந்திரதினம் வர இருப்பதால் பயங்கரவாதிகள் ஏதேனும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடிகர்களுக்கு கொக்கேன் கொடுத்தது யார்.? நடிகர் நடிகைகள் உடல் பரிசோதனை செய்க..! வீரலட்சுமி..!!

சிறுபான்மையினருக்கு எதிராக ஒருபோதும் பேசவில்லை..! பிரதமர் மோடி..!!

என்ன திமிரு இருந்தா என் லவ்வரையே கல்யாணம் பண்ணுவ! மாப்பிள்ளையை கத்தியால் குத்திய முன்னாள் காதலன்! – அதிர்ச்சி வீடியோ!

மனைவியை அடித்துக் கொன்ற கணவர்.! உடலை தூக்கில் தொங்கவிட்ட கொடூரம்..!!

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக் கூத்து.! ஓட்டு சதவீதத்தில் குளறுபடி..! இபிஎஸ் விமர்சனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments