Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணுவ வீரர் மறைவு ; சவப்பெட்டி மீது 5 மாத குழந்தை : உருக்கும் புகைப்படம்

Webdunia
திங்கள், 16 ஜூலை 2018 (17:23 IST)
காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் பலியான இந்திய ராணுவ வீரரின் இறுதி சடங்கில் அவரின் 5 மாத குழந்தை கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

 
கடந்த சில நாட்களாகவே, காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் இந்திய ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது. இந்த சண்டையின் போது, தீவிரவாதிகள் சுட்டதில், ராஜாஸ்தானை சேர்ந்த முகுத் பிகாரி மீனா என்ற ராணுவ வீரர் பலியானார். 
 
அவரின் இறுதி சடங்கு அவரின் சொந்த கிராமத்தில் செய்யப்பட்டது. 2 வருடங்களுக்கு முன்புதான் அவருக்கு திருமணம் நடந்து 5 மாத பெண் குழந்தை இருக்கிறது. 
 
இவரது இறுதி சடங்கில் அவரின் குழந்தையும் கலந்து கொண்டாள். தந்தை இறந்து கூட தெரியாமல் அந்த பிஞ்சு குழந்தை, அவரின் சவப்பெட்டியின் மீது அமர்ந்து சென்றாள். ஒரு கட்டத்தில் அதன் மேலேயே அவள் படுத்துக்கொண்டாள். பார்ப்பதற்கு மனதை உருக்கும் நிகழ்வாக அது இருந்தது. 
 
இந்த காட்சியை புகைப்படம் எடுத்த சிலர், அதை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர்.  

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

தங்கத்தின் மதிப்பில் எத்தனை சதவீதம் வரை கடன் பெற அனுமதி: ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு..!

இன்று ஒரே நாளில் ரூ.1200 குறைந்தது தங்கம் விலை.. மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..!

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments