Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயுதங்களுடன் பீகார் வங்கியில் கொள்ளை: 4 பேர் காயம்

ஆயுதங்களுடன் பீகார் வங்கியில் கொள்ளை: 4 பேர் காயம்

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2016 (15:58 IST)
பீகார் மாநிலம் சிவான் மாவட்டம், தீன்தயாள் பஜாரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளையில் ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளையர்கள் 17 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துள்ளனர். இதில் நான்கு பேர் காயமடைந்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.


 
 
ஆயுதங்களுடன் பகல் 11.30 மணிக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் நுழைந்த நான்கு கொள்ளையர்கள் மூன்று வங்கி ஊழியர்கள் மற்றும் ஒரு வாடிக்கையாளரை துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் அங்கிருந்து சுமார் 17 லட்சம் ரூபாயை கொளையடித்து சென்றனர் என துணை காவல் கண்கணிப்பாளர் அரவிந்த் குமார் குப்தா தெரிவித்தார்.
 
நான்கு கொள்ளையர்கள் வங்கியில் கொள்ளையடித்த போது அவர்களுக்கு பாதுகப்பாக இரண்டு பேர் வெளியே நின்றதாக குப்தா கூறினார். இதில் காயமடைந்தவர்கள் சதார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
 
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒருவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்து வருவதாகவும், விரைவில் குற்றவாளிகளை பிடிப்போம் என துணை காவல் கண்கணிப்பாளர் குப்தா தெரிவித்தார்.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments