Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆயுதங்களுடன் பீகார் வங்கியில் கொள்ளை: 4 பேர் காயம்

ஆயுதங்களுடன் பீகார் வங்கியில் கொள்ளை: 4 பேர் காயம்

ஆயுதங்களுடன் பீகார் வங்கியில் கொள்ளை: 4 பேர் காயம்
, செவ்வாய், 1 மார்ச் 2016 (15:58 IST)
பீகார் மாநிலம் சிவான் மாவட்டம், தீன்தயாள் பஜாரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளையில் ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளையர்கள் 17 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துள்ளனர். இதில் நான்கு பேர் காயமடைந்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.


 
 
ஆயுதங்களுடன் பகல் 11.30 மணிக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் நுழைந்த நான்கு கொள்ளையர்கள் மூன்று வங்கி ஊழியர்கள் மற்றும் ஒரு வாடிக்கையாளரை துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் அங்கிருந்து சுமார் 17 லட்சம் ரூபாயை கொளையடித்து சென்றனர் என துணை காவல் கண்கணிப்பாளர் அரவிந்த் குமார் குப்தா தெரிவித்தார்.
 
நான்கு கொள்ளையர்கள் வங்கியில் கொள்ளையடித்த போது அவர்களுக்கு பாதுகப்பாக இரண்டு பேர் வெளியே நின்றதாக குப்தா கூறினார். இதில் காயமடைந்தவர்கள் சதார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
 
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒருவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்து வருவதாகவும், விரைவில் குற்றவாளிகளை பிடிப்போம் என துணை காவல் கண்கணிப்பாளர் குப்தா தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil