Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவை உலுக்கிய காட்டுயானை! – படமாகிறது ‘அரிக்கொம்பன்’!

Webdunia
திங்கள், 15 மே 2023 (13:01 IST)
கடந்த 5 ஆண்டுகளாக கேரளாவை குலை நடுங்க செய்த காட்டு யானையான அரிக்கொம்பனின் கதையை மலையாளத்தில் படமாக எடுக்க உள்ளார்கள்.

கேரளாவில் கடந்த 5 ஆண்டு காலமாக இடுக்கி மாவட்டத்தின் கேரள – தமிழக எல்லை கிராமங்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை காட்டு யானை அரிக்கொம்பன் (அரிசி கொம்பன்). சின்னக்கனல், சந்தனபாறை உள்ளிட்ட பல பகுதிகளில் புகுந்து வீடுகளை, விளை நிலங்களை சூறையாடிய அரிக்கொம்பன் இதுவரை 20 பேரை கொன்றுள்ளது. சமீபத்தில் தேனி மாவட்ட வன எல்லைக்குள் புகுந்த அரிக்கொம்பன் ஒரு ரேசன் கடையை துவம்சம் செய்தது.

இந்த அரிக்கொம்பன் யானையைன் கதையை மையப்படுத்தி ‘அரிக்கொம்பன்’ என்ற பெயரிலேயே மலையாளத்தில் ஒரு படம் எடுக்க இருக்கிறார்கள். சஜித் யாஹியா இயக்கும் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளதுடன், இலங்கையில் படப்பிடிப்பை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments