Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரில் வாக்குவாதம்....மதுபான பாட்டில்களால் தாக்கிக்கொண்ட இளைஞர்கள்!

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2022 (18:20 IST)
புதுச்சேரி அண்ணாசாலையில் உள்ள பாரில்  இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது,

புதுச்சேரி அண்ணாசலையில் உள்ள ஒரு தனியார் மதுபானக் கடை மற்றும் உணவு விடுதியில் நேற்றிரவு சுமார் 8:30 மணியளவில் கேரளா மற்றும்  அருகில் வசிக்கும் புதுச்சேரி  சேர்ந்த இளைஞர்கள், மது அருந்திக் கொண்டிருந்தனர்.
 

ALSO READ: ஆடையில் மலம் கழித்த சிறுவன் மீது சுடுதண்ணீர் ஊற்றிய ஆசிரியர்!

இந்த நிலையில், இளைஞர்கள் மது அருந்திக் கொண்டிருக்கும்போது, இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அப்போது, வாக்குவாதம் முற்றி இருதரப்பினரும், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

அதன்பின், இதுகுறித்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து, போலீஸார், கேரளா இளைஞர்களை அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய புதுச்சேரி இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments