Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பாதித்த வெளிநாட்டு பயணி தலைமறைவு! டெல்லியில் பரபரப்பு!

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (15:32 IST)
டெல்லியில் தாஜ்மஹாலை சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிக்கு கொரோனா இருந்த நிலையில் அவர் தலைமறைவானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாடுகளுக்கு சென்று வருபவர்கள், வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த ஒருவர் தாஜ்மஹாலை சுற்றி பார்ப்பதற்காக இந்தியா வந்துள்ளார். அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் அந்த பயணி மாயமாகிவிட்டார். இதனால் மாயமான பயணியை டெல்லி சுகாதாரத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments