தாஜ்மகாலை அழிக்க போகிறீர்களா? மத்திய அரசை கண்டித்த உச்ச நீதிமன்றம்

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (13:07 IST)
தாஜ்மகாலை சுற்றியுள்ள மரங்களை வெட்ட அனுமதி கோரிய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.


 

 
உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான தாஜ்மகால் தற்போது சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக அதன் அழகை இழந்து வருகிறது. மத்திய அரசு புதிதாக அமைக்க உள்ள ரயில்பாதை தாஜ்மகால் அருகே அமைய உள்ளது. அதற்காக தாஜ்மகாலை சுற்றி உள்ள 450 மரங்களை வெட்ட அனுமதிக்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
 
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மத்திய அரசுக்கு எதிராக தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:-
 
தாஜ்மகால் உலக புகழ்பெற்ற நினைவு சின்னம். அதை அழிக்க போகிறீர்களா? தாஜ்மகாலின் சமீபத்திய படங்களை பார்த்து இருக்கிறீர்களா? இணையதளத்தில் பாருங்கள். அதன்பிறகும் நீங்கள் விரும்பினால், தாஜ்மகாலை அழிக்க இந்திய அரசு விரும்புகிறது என்று பிரமாண பத்திரமோ அல்லது மனுவோ தாக்கல் செய்யுங்கள் என்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments