Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கெஜ்ரிவாலுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

கெஜ்ரிவாலுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை
, சனி, 2 மே 2015 (10:18 IST)
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிரான அவதூறு வழக்கிற்க்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
 
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சர் கபில்சிபலின் மகன் அமித் சிபல் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித்தின் முன்னாள் அரசியல் செயலாளர் பவன் கெரா ஆகியோர் அவதூறு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளுக்கு எதிராக கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.          
 
அதனை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிச்ரா, பி.சி.பந்த் ஆகியோர் கொண்ட அமர்வு, கெஜ்ரிவால் மீதான அவதூறு வழக்குகளை விசாரிக்க கீழ் நீதிமன்றங்களுக்கு தடை விதித்து நேற்று உத்தரவிட்டது. ஏற்கனவே கெஜ்ரிவால் மீது மத்திய அமைச்சர் நிதின்கட்காரி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு விசாரணைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil