Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோடி அலை முடிந்துவிட்டது: இடைத்தேர்தல் முடிவு குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து

மோடி அலை முடிந்துவிட்டது: இடைத்தேர்தல் முடிவு குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து
, செவ்வாய், 16 செப்டம்பர் 2014 (19:07 IST)
மோடியின் அலை முடிந்துவிட்டது. இன்றைய இடைத்தேர்தல் முடிவு மூலம் உண்மையை மக்கள் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள் என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
 
9 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் பாஜகவுக்கு பெரும் சறுக்கல் ஏற்பட்டது.
 
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவிக்கையில், ‘‘மோடியின் அலை முடிந்துவிட்டது. இன்றைய இடைத்தேர்தல் முடிவு மூலம் உண்மையை மக்கள் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். கடந்த 100 நாட்களில் ஊழல் மற்றும் பணவீக்கம் அதிகரித்து மக்களின் நம்பிக்கையை சிதறடித்துவிட்டன என்பதை இன்றைய முடிவு தெளிவாகக் காட்டுகிறது. மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள்” என்றார்.
 
உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடந்த 11 தொகுதிகளில் பாஜக 3 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. அதேபோல் ராஜஸ்தானில் 4 தொகுதியில் ஒரு தொகுதியை மட்டுமே பாஜக வென்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil