Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'ஏப்ரல் 1 - அரவிந்த் கெஜ்ரிவால் தினம்': டெல்லியில் ஒட்டப்பட்ட பரபரப்பு போஸ்டர்!

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2015 (15:39 IST)
முட்டாள்கள் தினமாக கருதப்படும் ஏப்ரல் 1 ஆன இன்று, ‘ஏப்ரல் 1 - அரவிந்த் கெஜ்ரிவால் தினம்’ என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. டெல்லியில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

 
ஏப்ரல் 1ஆம் தேதி முட்டாள்கள் தினமாக கருதப்படுவதும், இந்த நாளில் ஒருவரையொருவர் விளையாட்டாக ஏமாற்றுவதும் வழக்கம்.
 
இந்நிலையில், தலைநகர் டெல்லி முழுவதும் இன்று ‘ஏப்ரல் 1 - அரவிந்த் கெஜ்ரிவால் தினம்' என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. 'பகத் சிங் கிராந்தி சேனா' என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில் அரவிந்த் கெஜ்ரிவால் தலையை தொங்கவிட்டபடி உள்ள பழைய படமும் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களிலும் வெளியாகியுள்ளது.
 
ஏற்கனவே, ஆம் ஆத்மி கட்சியில் தலைவர்களுக்கிடையே பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், இப்படி ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments