Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாக்கை வெட்டி கோவில் உண்டியலில் போட்ட வாலிபர்: வேண்டுதல் என்ன தெரியுமா?

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (22:08 IST)
தெலுங்கானா மாகாணத்தில் ஒரு வாலிபர் தனது நாக்கை திடீரென வெட்டி கோவில் உண்டியலில் காணிக்கையாக போட்டார். இதனை அருகில் இருந்து பார்த்த பக்தர்கள் சிலர் அதிர்ச்சியில் உறைந்தும் சிலர் அலறி அடித்தும் ஓடினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தெலுங்கானா மாநிலத்தில் வரும் 7ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்துவிட்ட நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அவர்களின் தீவிர தொண்டர் ஒருவர் சந்திரசேகரராவ் மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதற்காக கோவில் உண்டியலில் நாக்கை வெட்டி போட்டுள்ளார்.

இந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த வாலிபருக்கு மீண்டும் நாக்கை ஒட்ட வைக்க முடியுமா? என்று மருத்துவர்கள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஒரு அரசியல் தலைவருக்காக நாக்கை வெட்டிய தொண்டரின் தீவிர விசுவாசம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments