Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிபிஐ நுழைய கூடாது: அதிரடியாக உத்தரவு போட்ட இரண்டு மாநிலங்கள்

Webdunia
சனி, 17 நவம்பர் 2018 (09:24 IST)
சோதனைகள் மற்றும் வழக்கு விசாரணை குறித்து சிபிஐ அதிகாரிகள் தங்களுடைய மாநிலத்தில் நுழைய வேண்டுமெனில் மாநில அரசின் அனுமதியை பெற வேண்டும் என இரண்டு மாநிலங்கள் உத்தரவு போட்டுள்ளதால் தேசிய அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சோதனை மற்றும் வழக்கு விசாரணைக்காக தங்கள் மாநிலத்திற்குள் சிபிஐ நுழைய தடை விதித்து சமீபத்தில் ஆந்திர மாநில அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில் இதேபோன்ற ஒரு உத்தரவை மேற்குவங்க அரசும் பிறப்பித்துள்ளது.

மேலும் மேற்கு வங்கத்தில், சி.பி.ஐ., அதிகாரிகள் நுழைவதற்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த, மாநில அரசின் தடையில்லா சான்று திரும்ப பெற்றுக்கொள்வதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று அறிவித்துள்ளார். இதனால் இனிமேல் மேற்குவங்க மாநில அரசின் முன் அனுமதியின்றி சி.பி.ஐ. அதிகாரிகள் எந்தவொரு சோதனைக்கும் மாநிலத்திற்குள் நுழைய முடியாது.

அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் மத்திய அரசு சிபிஐ அமைப்பை அடிக்கடி பயன்படுத்துவதால் ஆந்திரா, மேற்குவங்கம் ஆகிய இரு மாநிலங்களூம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிகிறது. இதே உத்தரவை மற்ற மாநிலங்களும் பிறப்பித்தால் சிபிஐயின் வானளாவிய அதிகாரம் சுருங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments