Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எந்த சூழ்நிலையிலும், லட்சுமணன் கோட்டை தாண்டக் கூடாது - பிரதமர் மோடி அறிவுரை

எந்த சூழ்நிலையிலும், லட்சுமணன் கோட்டை தாண்டக் கூடாது  - பிரதமர் மோடி அறிவுரை
, செவ்வாய், 16 டிசம்பர் 2014 (16:07 IST)
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த சூழ்நிலையிலும், லட்சுமணன் கோட்டை தாண்டக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
 
கடந்த சில காலங்களாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களும், கட்சித் தலைவர்களும் சர்ச்சைக்குறிய கருத்துக்களைத் தெரிவித்து கண்டங்களை மூட்டை மூட்டையாக அள்ளிக் கட்டிக் கொள்கின்றனர். இதனால் மேலிடத்தில் இது சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
இதனால் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவை சகாக்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவுரை வழங்கும் வகையில் எச்சரித்துப் பேசியுள்ளார்.
 
இது தொடர்பாக இன்று நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, “பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கும், கட்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான சர்ச்சை பேச்சுக்களைப் பேசக்கூடாது.
 
எந்த சூழ்நிலையிலும், லட்சுமணன் கோட்டை தாண்டக் கூடாது. இது போன்ற தேவையற்ற பேச்சுக்களால் அரசின் கவனம் திசை மாறுகிறது என்பதால், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil