Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐரோம் ஷர்மிளா மீண்டும் காவல் துறையினரால் கைது

Webdunia
வெள்ளி, 22 ஆகஸ்ட் 2014 (15:21 IST)
ஆயுதப்படை வீரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை திரும்பப்பெற கோரி போராடிவரும் ஐரோம் ஷர்மிளா மீண்டும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 
தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் அவர் மீது மணிப்பூர் காவல் துறையினர் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 
 
இந்நிலையில், தன்னை விடுதலை செய்யக்கோரி ஷர்மிளா தொடர்ந்த வழக்கில் அவரை விடுதலை செய்யும்படி தீர்ப்பு வந்ததை அடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
 
விடுதலையான ஷர்மிளா தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டதை அறிந்த காவல் துறையினர் அவரின் உடல் நிலையை பரிசோதிக்க முயற்சித்தபோது, தான் நலமாக இருப்பதாக தெரிவித்த ஷர்மிளா , பரிசோதனை மேற்கொள்ள மறுத்துவிட்டார்.
 
இதையடுத்து மணிப்பூர் காவல்துறையினர் ஷர்மிளாவை வலுக்கட்டாயமாக அவர் உண்ணாவிரதம் இருந்த இடத்தில இருந்து கைது செய்தனர்.  
 
கைது செய்யப்பட்ட ஷர்மிளாவிற்கு கட்டாயப்படுத்தி மூக்கில் இருக்கும் ட்யூப் மூலம் உணவு வழங்கப்படும் எனத் தெரிகிறது. 
 

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments