Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் அதே கட்டிடத்தில் தீ விபத்து..

Arun Prasath
திங்கள், 9 டிசம்பர் 2019 (10:04 IST)
டெல்லியில் நேற்று தீ விபத்து ஏற்பட்ட அதே 4 மாடி கட்டிடத்தில் இன்று காலை மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் அமைந்துள்ள அனஜ் மண்டி என்ற 4 மாடி கட்டிடத்தில் நேற்று தீடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்த்தில் 43 பேர் பலியாகினர். கிட்டதட்ட 5 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். 63 க்கும் அதிகமானோர் தீ விபத்திலிருந்து மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை அதே கட்டிடத்தில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. தீயினை அணைக்கும் முயற்சியில் 4 தீயணைப்பு வாகனத்தில் வந்த வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அனஜ் மண்டி கட்டிடத்தில் முறையாக அனுமதி பெறாத தொழிற்சாலைகள் இயங்கி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் போலீஸார் கட்டிடத்தின் உரிமையாளர் ரெஹான் என்பவரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments