Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நல்ல வேளையாக நான் கெஜ்ரிவாலுடன் இல்லை : அன்னா ஹசாரே கருத்து

நல்ல வேளையாக நான் கெஜ்ரிவாலுடன் இல்லை : அன்னா ஹசாரே கருத்து
, செவ்வாய், 24 நவம்பர் 2015 (18:33 IST)
டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் லாலு பிரசாத்தும் கட்டியணைத்த படியான ஒரு புகைப்படம் வெளியானது. 


 
 
சமீபத்தில் நடந்த பீகார் சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்றி நிதிஷ்குமாரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்றிருந்தார். அப்போது மேடையிலிருந்த லாலு பிரசாத், கெஜ்ரிவாலை கட்டியணைத்து பத்திரிக்கையாளர்களுக்கு போஸ் கொடுத்தார்.
 
ஊழலுக்கு எதிராக போராடி வருவதாக கூறிக்கொள்ளும் கெஜ்ரிவால், உழல்வாதி நீதிமன்றத்தில் நீரூபிக்கப்பட்டு பதவியிழந்த லாலுவை எப்படி கட்டியணைத்து புகைப்படம் எடுக்கலாம் என்று கடும் விமர்சனங்கள் எழுந்தது.
 
இதற்கு பதிலளித்துள்ள கெஜ்ரிவால், நான் அப்படி செய்யவில்லை. லாலுதான் என்னை கட்டியணைத்து போஸ் கொடுத்தார். நான் அவரின் குடும்ப அரசியலுக்கு எப்போதும் எதிரானவன்தான் என்று கூறினார்.
 
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அன்ன ஹசாரே “நல்ல வேளையாக நானும் அர்விந்த் கெஜ்ரிவாலும் பிரிந்து விட்டோம். இல்லையெனில் நானும் அவரைப்போல் இப்படி இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டிருப்பேன்” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil