Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு தடவ நான் சொல்றத கேளு..! செல்பியில் தூக்கு போட்டுக் கொண்ட மாணவி! – ஆந்திராவில் அதிர்ச்சி!

Webdunia
ஞாயிறு, 12 ஜூலை 2020 (13:00 IST)
ஆந்திராவில் காதல் தோல்வியால் மாணவி ஒருவர் காதலனுக்கு வீடியோ கால் அழைத்து தூக்கு போட்டுக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்தவர் ரம்யா. இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவ பார்கவ் என்ற இளைஞருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. நட்பு காதலாக மாறி இருவரும் காதலித்து வந்த நிலையில் திடீரென ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக சிவபார்கவ் ரம்யாவுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.

சிவபார்கவை சமாதானம் செய்ய ரம்யா பலமுறை முயன்று பார்த்துள்ளார். ஆனால் ரம்யாவை தொடர்ந்து தவிர்த்து வந்திருக்கிறார் சிவபார்கவ். இதனால் மனமுடைந்த ரம்யா தனது அறையில் தூக்கு மாட்டிக்கொண்டதோடு அதை தனது செல்போனில் வீடியோ எடுத்து சிவபார்கவுக்கு அனுப்பி தன்னிடம் பேசுமாறு கேட்டுள்ளார். ஆனால் அவரிடமிருந்து பதில் வராததால் விரக்தியடைந்த ரம்யா வீடியோவை ஆன் செய்து வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ரம்யா செல்போனில் உள்ள வீடியோக்களை கொண்டு சிவபார்கவ் மற்றும் ரம்யாவின் தோழிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments