Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆந்திரப் பெண்களை குறிவைத்து ஊசியால் குத்தும் சைகோவின் உருவப்படம் வெளியீடு

ஆந்திரப் பெண்களை குறிவைத்து ஊசியால் குத்தும் சைகோவின் உருவப்படம் வெளியீடு
, செவ்வாய், 1 செப்டம்பர் 2015 (15:03 IST)
ஆந்திரப் பெண்களை குறிவைத்து ஊசியால் குத்தும் சைகோவின் உருவப்படம் வெளியாகியுள்ளது. மேலும், கால்நடைகளுக்கு போடப்படும் ஊசியை அவன் பயன்படுத்தியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் ஆந்திரப் பெண்களை குறிவைத்து ஒரு சைகோ ஊசியால் பின்புறம் குத்தி விட்டு பைக்கில் வேகமாக மறைந்து போவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இப்போது அவன், ஆடு, மாடுகளுக்கு பயன்படுத்தும் ஊசியினைப் பயன்படுத்து வருவதும், மேலும் அந்த ஊசியின் மூலம் போதை மருந்தை செலுத்துவதும் தெரிய வந்துள்ளது.  அவன் இப்படி செய்வதற்கான நோக்கம் என்ன என்பதை கண்டு பிடிக்க முடியாமல் ஆந்திர காவல் துறையினர் திணறி வருகின்றனர். 45 சிறப்புப் படை மற்றும் 25 சோதனைச் சாவடி அமைத்து தேடி வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மூலம் அவனின் உருவம் தெரிய வந்துள்ளது. அந்தப் பெண் கூறிய அங்க அடையாளங்களை வைத்து ஒரு உருவப்படம் வெளியிட்ட காவல் துறையினர், அவனைப் பிடித்து தருபவர்களுகு ரூபாய் 1 லட்சம் பரிசுத் தொகையும் தருவதாக அறிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil