Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பார்வையற்ற மாணவர்களைக் கொடூரமாக அடித்த ஆசிரியர்

பார்வையற்ற மாணவர்களைக் கொடூரமாக அடித்த ஆசிரியர்
, செவ்வாய், 22 ஜூலை 2014 (14:54 IST)
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பார்வைற்ற 3 மாணவர்களை ஆசிரியர் பிரம்பால் கொடூரமாக அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காக்கிநாடா திம்மபுரத்தில் பார்வையற்ற மாணவர்களுக்கான தனியார் பள்ளியில் நடந்த சம்பவம் இரண்டு நாட்களுக்குப் பிறகு உள்ளூர் தொலைக்காட்சியில் வெளியானது.

மாணவர்கள் கதறித் துடித்தும் தனது ஆத்திரம் தீரும் வரை ஆசிரியர் இரக்கமின்றி அடித்தார். இந்த வீடியோ பதிவை தொலைக்காட்சியில் பார்த்த பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கடும் கோபமடைந்துள்ளனர்.

இந்நிலையில் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்குள் நுழைந்து அலுவலகத்தில் இருந்த பள்ளி முதல்வர் ஸ்ரீநிவாசை அடித்து உதைத்தனர்.

கண் பார்வைற்ற அவரை நாற்காலி மீது தூக்கி வீசியதுடன், வெளியில் இழுத்து வந்தனர். பின்னர் காவல்துறையினர் சம்பவ இடத்திக்கு வந்து முதல்வரை மீட்டு கைது செய்தனர்.

பள்ளி செயலாளர் கே.வி.ராவும் கைது செய்யப்பட்டார். பெற்றோர் கொடுத்த புகார்களின் அடிப்படையில் இவர்கள் இருவரின் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் சம்பவம் நடந்த பள்ளி, மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களை ஆசிரியர் அடித்த வீடியோ காட்சி இங்கே -
 

Share this Story:

Follow Webdunia tamil