Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிக் டாக்கில் கலக்கும் துணை முதல்வர்: கொந்தளிக்கும் எதிர்கட்சி!

Webdunia
வியாழன், 2 ஜனவரி 2020 (19:46 IST)
டிக் டாக்கில் கலக்கும் ஆந்திர துணை முதல்வர் புஷ்பா ஸ்ரீவாணிய எதிர்கட்சியினர் விமர்சித்துள்ளனர். 
 
ஆந்திராவில் சில மாதங்களுக்கு முன்பு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. இதனைத்தொடர்ந்து ஜெகன் பல அறிவிப்புகளை மக்களுக்காக வழங்கி வருகிறார். ஜெகன் மோகன் ரெட்டியை அம்மாநில மக்கள் முதல்வராக இல்லாமல் தங்கள் வீட்டி பிள்ளையாகவே நினைக்கின்றனர். 
 
ஜெகன் மோகன் ரெட்டி வழக்கமாக இல்லாமல் 5 துணை முதல்வர்களை நியமித்தார். அதில் ஒரு துணை முதல்வராக இருப்பவர் புஷ்பா ஸ்ரீவாணி. இவர் சமீபத்தில், ராயலசீமா முட்டுபிடா மன ஜெகன் அண்ணா என்ற பாடலுக்கு முக பாவனைகளுடன் டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டுள்ளது பெரும் வைரலாகி உள்ளது. 
 
புஷ்பா ஸ்ரீவாணி பழங்குடியினர் நலவாழ்வு துறை அமைச்சராகவும் உள்ளார் என்பது கூடுதல் தகவல். இந்நிலையில் இதை, எதிர்க்கட்சிகள் ஒரு துணை முதல்வராக இருந்து கொண்டு அநாகரிகமாக டிக் டாக் வீடியோ வெளியிட்டது பொறுப்பற்ற செயல் என விமர்சித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments