Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளூர் மக்களுக்கு 75 சதவீதம் வேலைவாய்ப்பு – அதிரடி செய்யும் ஜெகன் மோகன்

Webdunia
செவ்வாய், 23 ஜூலை 2019 (19:51 IST)
அனைத்து தனியார் நிறுவனங்களிலும் உள்ளூர் மக்களுக்கு 75 சதவீதம் வேலைவாய்ப்பை வழங்க செய்யும் புதிய மசோதா ஆந்திர அமைச்சரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநில அரசுகளிடம் அனுமதி பெற்று தொழிற்சாலை அமைக்கும் தனியார் நிறுவனங்கள் தங்கள் பணிகளுக்கு வேறு மாநிலத்தவரை வேலைக்கு அமர்த்துகின்றனர். இது நாடு முழுவதும் உள்ள நடைமுறையாகும். இதனால் உள்ளூர் மக்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் ஏற்படுவதுடன், வேலைக்காக அவர்கள் தங்கள் ஊர்களை விட்டு வெளியேரும் சூழலும் இருக்கிறது.

இதை கருத்தில் கொண்டு அரசு உதவி பெறும் மற்றும் உதவி பெறாத தனியார் நிறுவனங்கள் தாங்கள் தொழிற்சாலைகள், வளாகங்கள் அமைக்கும் இடங்களில் 75 சதவீதம் அந்த பகுதியை சேர்ந்த உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பினை அளிக்க வேண்டும். மீத 25 சதவீதத்தை அவர்கள் விருப்பப்படி பணியமர்த்தி கொள்ளலாம்.

ஒருவேளை உள்ளூர் மக்களுக்கு அந்த வேலை குறித்த அனுபவம் இல்லை என்றால் அவர்களுக்கு பயிர்சி மையத்தின் மூலம் போதிய அளவு பயிற்சி அளித்து பணியமர்த்தி கொள்ள வேண்டும் என்ற புதிய மசோதாவை நிரைவேற்றியுள்ளது. இதனால் மாநிலத்தில் வேலையில்லா திண்டாட்டம் குறைவதுடன், வேலை தேடி வெளிமாநிலங்கள் செல்வோரின் எண்ணிக்கையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டிலேயே முதன்முறையாக இந்த சட்டம் ஆந்திராவில்தான் நிறைவேற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments