Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளிர்காலக்கூட்டத் தொடரை பாஜகவுக்கு புயலாக மாற்ற ஆந்திர முதல்வர் பக்கா ப்ளான்!

Webdunia
சனி, 14 ஜூலை 2018 (14:56 IST)
ஆந்திராவிடம் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்ட போது, ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்திருந்தது. ஆனால், கொடுத்த வாக்கை காப்பாற்ற தவறிவிட்டது மத்திய அரசு.  
 
இதனால், ஆத்திரமடைந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாஜகவுடனான தெலுங்கு தேச கட்சியின் கூட்டணியை முறித்துக்கொண்டார். அதோடு, மோடியையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.   
 
இதற்கிடையே அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்காக மூன்றாவது தேசிய கட்சியை உருவாக்கும் முயற்சி நடந்துவருகின்றன. இந்த முயற்சியில் தெலுங்கு தேசம் கட்சி முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
இதனையடுத்து பாஜக மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால், காவிரி விவகாரத்தில் அதிமுகவினர் தொடர் அமலியில் ஈடுப்பட்டு வந்ததால் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படாமல் போனது. 
 
இந்நிலையில் மீண்டும் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர ஆந்திர முதல்வர் முடிவுசெய்துள்ளாராம். அதன்படி விரைவில் நடக்கவிருக்கும் குளிர்கால கூட்டத்தொடரின் போது செயல்படுத்த சில திட்டங்களை தீட்டியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments