Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் உண்ணாவிரதம்: முதல்வர் எடுத்த அதிரடி முடிவால் பெரும் பரபரப்பு

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2019 (08:45 IST)
டெல்லியில் உள்ள ஆந்திர பவனில் இன்று ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்று ஆந்திர மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை நிறைவேற்றாததால் மத்திய அரசில் இருந்து சந்திராபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி சமீபத்தில் வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டி இன்று ஒருநாள் டெல்லியில் உள்ள ஆந்திரபவனில் முதல்வர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் இருக்கவுள்ளார். அவருடன் மாநில அமைச்சர்களும், தெலுங்கு தேச எம்பிக்களும் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த உண்ணாவிரதம் 'தர்ம போராட்ட தீக்சா' என்ற பெயரில் நடைபெறவுள்ளது.

முன்னதாக உண்ணவிரதம் தொடங்குவதற்கு முன் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடம் மற்றும் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments