Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆந்திரா – தெலங்கானா..! ரூ.1 கோடி வழங்கிய ஜூனியர் என்.டி.ஆர்.!!

Senthil Velan
செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (15:33 IST)
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு  தலா ரூ.50 லட்சம் நிவாரண நிதி அளிக்கிறேன் என நடிகர் ஜூனியர் என்டிஆர் அறிவித்துள்ளார்.  
 
கடந்த சில நாட்களாக ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பெய்த கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது. கனமழை வெள்ளத்தால் இரு மாநிலங்களிலும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
 
இந்நிலையில், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில முதல்வர்களின் பேரிடர் நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆந்திரா, தெலங்கானா இரண்டு மாநிலங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.


ALSO READ: பாலியல் புகார்..! மலையாள நடிகர் பாபுராஜ் மீது மேலும் ஒரு வழக்கு.!
 
இந்த துயரத்திலிருந்து மக்கள் மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். வெள்ள மீட்பு பணிகளுக்காக இரண்டு மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைக்கு உதவும் வகையில், எனது பங்களிப்பாக 2 மாநிலங்களுக்கும் தலா ரூ.50 லட்சம் நிதியுதவி அளிக்கிறேன் என நடிகர் ஜூனியர் என்டிஆர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்