Webdunia - Bharat's app for daily news and videos

Install App

87 வயதிலும் ஆட்டோ ஓட்டும் முதியவர்

Webdunia
வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (09:39 IST)
தனது 87 வயதிலும் அடுத்தவர்களை நம்பி வாழாமல் முதியவர் ஒருவர், வாழ்க்கை நடத்தி வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இன்றைய நவீன உலகத்தில், பலர் அடுத்தவரின் பணத்தை திருடியும், நகையை திருடியும், வங்கியில் பணத்தை வாங்கிக் கொண்டு திரும்ப செலுத்தாமலும் பிழைப்பை நடத்தி வரும் வேளையில் முதியவர் ஒருவரின் செயல் இன்றைய இளம் தலைமுறையினருக்கு, பாடம் கற்பிக்கும் முறையில் உள்ளது.
 
டெல்லியை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ்(87). இவரது 87 வயதிலும் அடுத்தவர்களை நம்பி வாழாமல் உழைத்து சம்பாதித்து பிழைப்பு நடத்துகிறார். விபத்தை ஏற்படுத்தாத வகையிலும், மீட்டருக்கு மேல் ஒரு பைசா கூட மக்களிடம் கேட்காததாலும், இவரது ஆட்டோவில் பயணிக்க பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
 
1955-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை வாடகை டாக்சி ஓட்டி வந்த இவர். தற்பொழுது ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்த வயதிலும் உழைத்து சாப்பிட வேண்டும் என நினைக்கும் இவரது லட்சியம், பலருக்கு வாழ்க்கையில் முன்னேற உத்வேகத்தை அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது மனைவியின் பிரசவத்தின் போது முதல் மனைவியிடம் சிக்கிய நபர்! மனித வளத்துறையில் புகார்..!

பிரத்தியேக செயலியுடன் போலீசாருக்கு செல்போன்கள்: கோவை மாநகரக் காவல் துறை!

கூலி வேலைக்கு சென்று வைரத்துடன் திரும்பும் தொழிலாளிகள்.. ஆந்திராவில் பரபரப்பு..!

20 வயது திருமணமான பெண் கொலை.. வாயில் வெடிமருந்து வெடிக்க செய்த கள்ளக்காதலன்..!

காதலனை பணத்திற்காக விற்ற காதலி! சீனாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments