Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆற்றில் மூழ்கிய யானை; கயிறு கட்டி காப்பாற்றிய மக்கள் – நெகிழவைக்கும் வீடியோ!

Webdunia
செவ்வாய், 29 அக்டோபர் 2019 (17:41 IST)
ஆற்றில் மூழ்கிய யானை ஒன்றை பொதுமக்கள் நீண்ட நேரம் முயற்சி செய்து காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்திய வனத்துறை அதிகாரியான பர்வீன் கஸ்வான் வெளியிடும் விலங்குகள் நேய வீடியோக்கள் மற்றும் செய்திகள் மக்களிடையே விலங்குகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துபவை. சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் காயம்பட்ட யானை ஒன்று ஆற்றில் மூழ்கி சாகும் தருவாயில் உள்ளது.

அந்த ஆற்றின் கரையோரமாக இருந்த மக்கள் அந்த யானையை மீட்க கயிற்றை அதன் மேல் கட்டி ஊரே சேர்ந்து இழுக்கிறார்கள். கரைக்கு கொண்டு வரப்பட்ட யானையின் காயத்திற்கு மருந்திட்டு, சேற்றை கழுவி, உணவளித்து கவனித்து கொள்கின்றனர்.

எழ முடியாத யானையை அனைவரும் சேர்ந்து கட்டி எழுந்து நிற்க வைக்கிறார்கள். ஒரு யானையை காப்பாற்ற ஒரு கிராமமே எடுத்த அந்த முயற்சியை சுட்டிக்காட்டியுள்ள கஸ்வான் ‘இது பழைய வீடியோதான். ஆனாலும் விலங்குகள் மீது மக்கள் கொண்டுள்ள அன்பை அனைவரும் அறிய இதை ஷேர் செய்திருப்பதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments