Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய காவலர் கைது

Webdunia
செவ்வாய், 30 ஜனவரி 2018 (16:10 IST)
தெலுங்கானாவில் காவலர் ஒருவர் குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
ஐதராபாத் நகரில் மெட்சல் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் கிரிஷ் ராவ் (51). குடிபோதையில் இருந்த இவர் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தியுள்ளார். கிரிஷ் ஏற்படுத்திய விபத்தால் 2 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பல வாகனங்கள் சேதமாயின.
 
பொதுமக்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால், காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கும் வேலையில், குடித்து விட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய இந்த காவலரை என்ன செய்வது என பொதுமக்கள் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து பேசிய காவல் துறை உயரதிகாரி ஒருவர், குடித்து விட்டு விபத்து ஏற்படுத்திய கிரிஷ் ராவை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments