Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி 2 ஆண்டுகளுக்கு மேல் எந்த வழக்கும் நீடிக்காது: அமைச்சர் அமித்ஷா உறுதி..!

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (10:30 IST)
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று மசோதாக்கள் நிறைவேறிய பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இனி எந்த வழக்கும் நீடிக்காது என்றும் இதன் மூலம் 70% வழக்குகள் விரைவில் முடிவடையும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
 
குஜராத், மராட்டியம், கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களான டாமன்-டையு, தாத்ரா-நகர் ஹவேலி ஆகியவற்றை உள்ளடக்கிய மேற்கு மண்டல கவுன்சில் கூட்டம், நேற்று குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் நடந்தது. 
 
இதில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியபோது, ‘இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட 3 குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக, பாரதீய நீதி மசோதா, பாரதீய குடிமக்கள் பாதுகாப்பு மசோதா, பாரதீய சாட்சியங்கள் மசோதா சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த 3 மசோதாக்கள் நிறைவேறிய பிறகு, எந்த வழக்கும் 2 இனி ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது. இந்த 3 சட்டங்களை அமல்படுத்த தேவையான உள்கட்டமைப்பு மற்றும் திறன்களை அனைத்து மாநிலங்களும் உருவாக்க வேண்டும்’ என்றும் அமித்ஷா கேட்டு கொண்டார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி.. கொடுத்த வாக்குறுதிகள்..!

மூன்றாவது முறை பிரதமரானதும் முதலில் ரஷ்யா செல்லும் மோதி - புதினுடன் என்ன பேசவுள்ளார்?

சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் ரவுடியிசம்? பட்டபகலில் யூட்யூபரை மிரட்டும் போதை ஆசாமிகள்! – வைரலாகும் வீடியோ!

இன்று இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் கனமழை.. சென்னையில் மழை பெய்யுமா?

முதல்வரின் புதுக்கோட்டை பயணம் திடீர் ரத்து.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments