Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரவிந்த் கெஜ்ரிவாலுக்குத்தான் முதலிடம்: அமித்ஷா பரபரப்பு பேச்சு

Webdunia
வெள்ளி, 24 ஜனவரி 2020 (08:03 IST)
டெல்லியில் பிப்ரவரி 8ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அங்கு காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி என மும்முனை போட்டி உருவாகியுள்ளது. தேர்தல் பிரச்சாரம் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
 
ஊழலை ஒழிப்போம் என்று கூறி வரும் அரவிந்த் கெர்ஜிவால், அதற்கான லோக்பால் சட்டத்தை ஏன் நிறைவேற்றவில்லை. நீங்கள் அளித்த வாக்குறுதியை நீங்கள் மறக்கலாம். ஆனால் டெல்லி மக்கள் என்றைக்கும் மறக்க மாட்டார்கள்
 
நீங்கள் அன்னா ஹசாரே உதவியுடன்தான் முதல்வராக ஆனீர்கள். ஆனால் லோக்பாலுக்கு என ஒரு சட்டத்தை உங்களால் கொண்டு வர முடியவில்லை. நான்கரை ஆண்டுகளாக முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் செய்த ஒரே சாதனை பிரதமர் மோடியை வேலை செய்யவிடாமல் செய்தது தான்
 
போலி வாக்குறுதிகள் அளிப்பதில் யாருக்கு முதலிடம் என்ற ஒரு போட்டி வைத்தால் அதில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்குத்தான் முதலிடம் கிடைக்கும். அந்த அளவுக்கு போலியான நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அவர் அள்ளி வழங்கி வருகிறார் என்று அமித்ஷா அந்த கூட்டத்தில் பேசினார்,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேலும் 2 மெட்ரோ வழித்தடங்கள்.. மெட்ரோ நகரமாகும் சென்னை..!

நீதிமன்ற உத்தரவு எதிரொலி: போலீஸ் குவிப்பு.. போராட்டத்தை கைவிட தூய்மை பணியாளர்கள் மறுப்பு..!

ஆளுநரிடம் பட்டம் பெற மாட்டேன்! ஆர்.என்.ரவியை புறக்கணித்த மாணவி! - நெல்லையில் பரபரப்பு!

மதுரை மேயர் இந்திராணியின் கணவர்.. கைதான சில நிமிடங்களில் மருத்துவமனையில் அனுமதி..

பொய்யான பாலியல் புகார் கொடுப்பவர் மீது போக்சோ சட்டம் பாயும்: நீதிமன்றம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments