Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமிதாப் பச்சனை அதிர வைத்த ஆபாச எஸ்.எம்.எஸ்: காவல் நிலையத்தில் புகார்

அமிதாப் பச்சனை அதிர வைத்த ஆபாச எஸ்.எம்.எஸ்: காவல் நிலையத்தில் புகார்
, செவ்வாய், 1 செப்டம்பர் 2015 (03:31 IST)
இந்தியாவின் பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று வர்ணிக்கப்படும் அமிதாப் பச்சன் , தனது செல் போனுக்கு, ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பிய நபர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று புகார் அளித்துள்ளார்.
 

 
இந்தியாவின் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் டுவிட்டர் கணக்கை சுமார் ஒரு கோடியே 66 லட்சம் பின் தொடர்கின்றனர். சமூக வலைத்தளங்களில் மிகவும் செல்வாக்கு மிக்க இந்தியர்களின் பட்டியலில் அமிதாப் பச்சன் முதலிடத்தில் உள்ளார்.
 
இந்தியாவின் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தனது டுவிட்டர் கணக்கு ஹாக்கிங் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள நிலையில், தனக்கு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக, ஆபாச எஸ்.எம்.எஸ். வருவதாக புகார் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
 
இது குறித்து ஜுஹ காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளருக்கு அமிதாப் ஆதாரங்களுடன் புகார் தெரிவித்துள்ளார். மேலும், தனது புகார் மீது, உரிய விசாரணை செய்து, தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil