”இந்தியாவிற்கு எதிராக முழக்கமிட்டால் சிறை தான்”.. எச்சரிக்கும் அமித் ஷா

Arun Prasath
திங்கள், 13 ஜனவரி 2020 (15:48 IST)
தேசத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்புபவர்கள் சிறையில் தள்ளப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் அமித் ஷா எச்சரித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர் அமைப்புகள், எதிர்கட்சிகள் உள்ளிட்ட பல அமைப்புகளும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நடந்த பேரணியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “ஜே.என்,யு. பல்கலைக்கழகத்தில் சில மாணவர்கள் ”நாட்டை ஆயிரம் துண்டுகளாக உடைத்துவிடுவோம்” என முழக்கமிட்டுள்ளார்கள். அவர்களை சிறையில் அடைக்க வேண்டாமா? எவரெல்லாம் தேசத்திற்கு எதிராக முழக்கமிடுகிறார்களோ அவர்கள் சிறைக்கம்பிகளுக்கு பின்னே தள்ளப்படுவார்கள்” என அமித் ஷா எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments