Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமீர் கானை நாட்டை விட்டு வெளியேறுமாறு யாரும் சொல்ல முடியாது: மம்தா பானர்ஜி

Webdunia
வெள்ளி, 27 நவம்பர் 2015 (12:02 IST)
நடிகர் அமீர் கானை இந்தியாவை விட்டு வெளியே செல்லுமாறு யாரும் சொல்ல முடியாது என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.


 

 
நாட்டில் நிலவி வரும் சகிப்பின்மை குறித்து நடிகர் அமீர் கான் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அமீர் கானின் கருத்துக்கு ஆதரவுபும் எதிர்ப்பும் பெருகிக் கொண்டே உள்ளது.
 
அரசியல் தரப்பில் மட்டுமல்லாது திரைத்துறையினரும் அவர் மீது விமர்சனங்களை முன்வைத்தனர். இந்நிலையில், அமீர் கானுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், "ஜனநாயக நாட்டில்தான் உணர்ந்ததை கூற ஒருவருக்கு உரிமை உண்டு. அமீர் கான், தான் என்ன உணர்ந்தாரோ, அவர் மனைவி என்ன சொன்னாரோ அதை தான் கூறியுள்ளார்.
 
அமீர்கானை இந்தியாவை விட்டு வெளியேறுங்கள், வெளிநாட்டிற்குச் செல்லுங்கள், பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை.
 
நாம் எல்லோரும் இந்திய நாட்டின் குடிமக்கள். இந்த நாடு ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. இது நமது தாய்நாடு." என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments