Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடுத்த செயற்கை கருக்களை திரும்ப கேட்ட தம்பதி

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2016 (10:22 IST)
அமெரிக்க தம்பதியினர் இந்தியாவிற்கு அனுப்பி வைத்த தங்களது செயற்கை கருக்களை திரும்ப கேட்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.


 

 
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற செயற்கை கருக்களை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தனர். தற்போது இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற வெளிநாட்டினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை திரும்ப கேட்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
 
இதுகுறித்து மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது:-
 
மனு தாக்கல் செய்த தம்பதியினர் குழந்தை பெற முயற்சி செய்து முடியாத நிலையில், அந்நாட்டு மருத்துவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.
 
அதன் அடிப்படையில் அவர்களுக்கு இந்தியாவில் வாடகை தாய் கிடைத்தார். அதனால் அந்த தம்பதியினர் தங்களது செயற்கை கருக்களை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தனர். 
 
இந்நிலையில் 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அரசு வெளிநாட்டவர்களுக்கு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுத்தரும் முறையை தடை செய்தது. அதோடு செயற்கை கருக்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யவும் தடை செய்யப்பட்டது. எனவே அந்த தம்பதியினர் தங்களது செயற்கை கருக்களை திரும்ப தங்களிடமே ஒப்படைக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர், என்று கூறினார்.
 
மேலும் விதிமுறைகளை காரணம் காட்டி செயற்கை கருக்களை திருமப அனுப்பி வைக்காமல் இருப்பது மனித உரிமைகளுக்கு எதிரானது என்று தெரிவித்தார். 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments