Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறந்த குழந்தையை மஞ்சப்பையில் போட்டு அரசு பேருந்தில் கொண்டு வந்த தந்தை: அதிர்ச்சி சம்பவம்..!

Siva
ஞாயிறு, 15 ஜூன் 2025 (14:25 IST)
மகாராஷ்டிராவின் பாள்கர் மாவட்டம் மொகாடாவில், சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததாலும், ஆம்புலன்ஸ் வராததாலும் ஒரு கர்ப்பிணி பெண் தனது வயிற்றில் இருந்த குழந்தையை இழந்தார். இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஜூன் 10 அன்று பிரசவ வலி ஏற்பட்ட அவிதா கவாருக்கு, 108 ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கவில்லை. குடும்பத்தினர் தனியார் வாகனத்தில் கோடாலா ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு, நிலைமை மோசமானதால், மொகாடா மருத்துவமனைக்கு மாற்ற அறிவுறுத்தப்பட்டார்.
 
இரண்டு மணி நேரம் தாமதமாக வந்த ஆம்புலன்ஸால், கருவில் இருந்த குழந்தை உயிரிழந்துவிட்டது என கணவர் சக்காராம் கவார் குற்றம் சாட்டினார். பின்னர், உயிரிழந்த குழந்தையை மஞ்சப்பையில் வைத்துக்கொண்டு, 80 கி.மீ. தூரம் அரசு பேருந்தில் பயணம் செய்து இறுதிச் சடங்குகளைச் செய்துள்ளார். நியாயம் கேட்ட தன்னை காவல்துறை தாக்கியதாகவும் சக்காராம் குற்றம் சாட்டியுள்ளார்.
 
காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், சக்காராம் போதையில் இருந்ததாகவும், அவரது ஆக்ரோஷமான நடத்தை காரணமாகவே வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. ஒரு சந்தர்ப்பத்தில் ஆம்புலன்ஸ் தாமதமானதை மருத்துவ அதிகாரி ஒப்புக்கொண்டார். தாயான அவிதா, நாசிக் சிவில் மருத்துவமனையில் அவசர அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்றப்பட்டார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments