Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகிலேயே மிகப்பெரிய அமேசான் கட்டிடம்: இந்தியாவில் திறப்பு

Webdunia
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (14:13 IST)
உலகிலேயே மிகப்பெரிய அமேசான் நிறுவனத்தின் கட்டிடம் இந்தியாவில் திறக்கப்பட்டுள்ளது.

உலகளவில் ஆன்லைன் மார்க்கெட்டிங்கில் சிறந்து விளங்கும் அமேசான் நிறுவனம் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அமேசான், இந்தியாவில் மட்டும் 50,000 க்கும் மேற்பட்டவர்களை பணியில் அமர்த்தி வருகிறது.

இந்நிலையில் அமேசான் நிறுவனமானது, தெலுங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு, 30 ஆயிரம் சதுர அடி பரப்பு கொண்ட பிரம்மாணட கட்டிடத்தை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியது.

தற்போது கட்டிட பணிகள் முடிவடைந்து நேற்று முந்தினம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த கட்டிடம் தான் உலகிலேயே பிரம்மாண்டமான அமேசான் நிறுவனத்தின் கட்டிடம் என கூறப்படுகிறது. மேலும் அமெரிக்காவில் உள்ள அமேசான் தலைமையிடத்தை விடவும், ஹைதராபாத்தில் திறக்கப்பட்ட கட்டிடம் தான் மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments