Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அசாம் மாநிலத்தில் அல்கொய்தா தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி - தருண் கோகாய்

அசாம் மாநிலத்தில் அல்கொய்தா தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி - தருண் கோகாய்
, சனி, 20 செப்டம்பர் 2014 (20:06 IST)
அசாம் மாநிலத்தில் அல்கொய்தா தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக அம்மாநில முதலமைச்சர் தருண் கோகாய் தெரிவித்துள்ளார்.
 
கவுகாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அசாம் மாநிலத்தில் அல்கொய்தா தீவிரவாதிகள் முகாம் அமைக்க முயல்வதாக தெரிவித்துள்ளார். இதற்காக பல்வேறு பிரிவினைவாத அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்தி கொள்ள முயல்வதாகவும் அவர் கூறினார். இதையடுத்து விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தருண் கோகாய் குறிப்பிட்டுள்ளார்.
 
அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் உல்ஃபா தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த கோகாய் இரு குழுக்களும் ஒருவரை ஒருவர் விமர்சித்து கொள்வதில்லை என்று பதிலளித்தார். துர்கா பூஜையின் போது நாச வேலை நடத்த திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்தியாவில் அல்கொய்தா கிளை அமைக்கப்படும் என்று அண்மையில் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் அசாம் முதலமைச்சரின் பேட்டி அதனை உறுதிபடுத்தும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil