Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசும் மோடி: அல்கொய்தா இந்திய பிரிவு போர் எச்சரிக்கை!

Webdunia
திங்கள், 4 மே 2015 (16:11 IST)
அல் கொய்தா தீவிரவாத இயக்கம் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடிக்கு வீடியோ மூலம் மிரட்டல் விடுத்துள்ளது.
 

 
கடந்த 2 ஆம் தேதி வெளியான அந்த வீடியோவின் தலைப்பு ”பிரான்ஸ் முதல் பங்களாதேஷ் வரை”. இதில் இந்திய துணை கண்ட அல் கொய்தா பிரிவு தலைவர் மவுலானா அசிம் உமர் பேசியுள்ளார்.
 
இந்தியாவில் மோடியும் சங்க பரிவாரங்களும், இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்வதுடன் பல வழிகளில் அவர்களை கொடுமைப்படுத்துவதாகவும் கூறியுள்ளார் உமர். பிரதமர் நரேந்திர மோடியின் முஸ்லிம்களுக்கு எதிரான வார்த்தைகள் போருக்கு வழிவகுக்கக் காரணமாக உள்ளது என மிரட்டல் விடுத்துள்ளார். இந்திய துணை கண்டத்தில் இஸ்லாமிய ஆட்சி நிறுவப்படும் என்று வீடியோவில் கூறப்பட்டுள்ளது.
 
உலக வங்கி சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகள், ஆள் இல்லாத விமானத் தாக்குதல், சார்லி ஹெப்டோ பத்திரிகை படைப்புகள்,  ஐநாவின் கொள்கை மற்றும் நரேந்திர மோடி பேச்சுகள் என அதில் இடம் பெற்றுள்ளன. மேலும் அந்த பிரிவு வங்காள தேசத்தில் மரணமடைந்த  4 வங்காளதேச  பிளாக்கர் எழுத்தாளர்கள் கொல்லப்பட்டதற்கு பொறுப்பு ஏற்று கொண்டுள்ளது.
 
இந்த வீடியோ விவரம் குறித்து இந்திய உளவுத்துறை ஆய்வு செய்து வருகிறது.

போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

மோடி தியானம் செய்ய அனுமதி அளிக்க கூடாது: நீதிமன்றத்தை நாடுவோம்: செல்வபெருந்தகை..!

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

Show comments