Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னப்பா அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணிட்டீங்களா!? – சாய்னா, அக்‌ஷய் ட்வீட் வைரல்!

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (11:53 IST)
டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து பதிவிட்டுள்ள சாய்னா நேவால் மற்றும் அக்‌ஷய் குமார் ஒரே மாதிரியான பதிவை இட்டுள்ளது வைரலாகியுள்ளது.

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக வெளிநாட்டு பிரபலங்கள் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என இந்திய விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் உள்ளிட்டோர் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா, சாய்னா நேவால், அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அரசுக்கு ஆதரவாக அக்‌ஷய் குமார் பதிவிட்டுள்ள அதே பதிவை வார்த்தை மாறாமல் சாய்னா நேவாலும் பதிவிட்டுள்ளது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அக்‌ஷய்குமார் முதலில் பதிவிட்ட நிலையில் அந்த கருத்துகளோடு சாய்னா ஒன்றி போவதால் அதை நகல் எடுத்து பதிந்திருக்கலாம் என்ற ரீதியிலும் பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments