Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெஜ்ரிவால் தன்னை உள்ளாய்வு செய்து கொள்ள வேண்டும் - அஜய் மக்கான்

Webdunia
வெள்ளி, 24 ஏப்ரல் 2015 (19:33 IST)
ஆம் ஆத்மி பேரணியில் விவசாயி கஜேந்திரசிங் தற்கொலை செய்து கொண்ட பிறகும் தொடர்ந்து உரையற்றியதற்கு கேஜ்ரிவால் மன்னிப்பு கோரினார். ஆனால் மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது தன்னை உள்ளாய்வு செய்து கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
 
இது குறித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
எத்தனை முறை கேஜ்ரிவால் மன்னிப்பு கோருவார் என்று நாங்கள் கேட்க விரும்புகிறோம். 49 நாட்களில் ஆட்சியை கலைத்தற்காக மன்னிப்பு கோரினார். இப்போது மீண்டும் மன்னிப்பு கேட்டுள்ளார். எனவே அவர் தன்னை உள்ளாய்வு செய்ய வேண்டியுள்ளது. மன்னிப்பு கோருவது போதுமானதாக இருக்காது. இது போன்றவைகள் ஏன் நடக்கிறது என்று அவர் சிந்தித்து பார்க்க வேண்டும்.
 
ஊடகங்களை சாடும் கேஜ்ரிவால் அதே ஊடகங்களில் தான் பேசுகிறார். கேஜ்ரிவால் குற்றம் சுமத்துவதில் இருந்து வெளியேறி தன்னை உள்ளாய்வு செய்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments