Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரச குடும்பத்தின் வாரிசாக முன்னாள் கிரிக்கெட் வீரா் அஜய் ஜடேஜா அறிவிப்பு.. குவியும் வாழ்த்துக்கள்..!

Mahendran
ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (10:36 IST)
முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா, குஜராத் மாநிலம் ஜாம்நகர் அரச குடும்பத்தின் வாரிசாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
 
இன்றைய தினம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஜாம்நகர் அரச குடும்பத்தின் அடுத்த வாரிசு பற்றி அறிவிக்கப்பட்டது, அதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா என்பவரை வாரிசாக அறிவித்துள்ளனர்.

ஜாம்நகர் மன்னர் ஷத்ரு சல்யா சிங் இதுகுறித்து பேசும் போது, தசரா பண்டிகை கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், என்னுடைய உறவினரான அஜய் ஜடேஜாவை அரச குடும்பத்தின் வாரிசாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார்.

மேலும், நீண்ட நாட்களாக இருந்து வந்த குழப்பம் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளதாகவும், ஜாம்நகர் மக்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சி அளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அஜய் ஜடேஜா, தனது சேவையால் அரச குடும்பத்திற்கு பெருமை சேர்ப்பார் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

53 வயதான அஜய் ஜடேஜா 1992 முதல் 2000 வரை, 8 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடினார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அவர், கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments