Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான நிலையத்தில் தூங்கக் கூடாது – பயணிகளைக் கடுப்பாக்கிய உத்தரவு !

Webdunia
வியாழன், 11 ஜூலை 2019 (15:13 IST)
இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் காத்திருக்கும் பயணிகள் தூங்கக்கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோவா விமான நிலையத்தில் பயணிகள் சிலர் விமானப் புறப்பாடு பகுதிக்கு அருகில் கீழே படுத்து உறங்கிக்கொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைதளங்களில் பரவ பலரும் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து இனிமேல் விமான நிலையங்களில் பயணிகள் தூங்கக்கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து இப்போது சென்னை விமான நிலையத்திலும் இதுபோல பயணிகள் தூங்கக்கூடாது என வாய்மொழியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானத்துக்காக காத்திருக்கும் போது சேர்களில் அமர்ந்தபடியே உறங்கும் பயணிகளை காவலர்கள் எழுப்பி தூங்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பயணிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

முன்னறிவிப்பு இல்லாமல் விமான நேரத்தை தாமதப்படுத்துவது போன்ற செயல்களைத் தவிர்த்தால் பயணிகளின் காக்கும் நேரத்தை வீணாக்காமலும் இது போன்ற செயல்களை தவிர்க்கவும் செய்யலாம் எனப் பயணிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மாமியாருடன் குடும்பம் நடத்தும் மருமகன்.. காவல்துறையில் மாமனார் அளித்த புகார்.

திருடர்கள் என்ற பழியை தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் சுமத்தலாமா.? முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம்..!!

நான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல்காந்தி: செல்லூர் ராஜு

கோயம்பேட்டில் பசுமைப் பூங்கா அமைக்க வேண்டும்..! முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்.!!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவு எதிரொலி.. அதிபர் தேர்தல் நடத்த திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments