Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியர்களை மீட்க நாளை கிளம்பும் ஏர் இந்தியா?

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (15:05 IST)
நாளை 2 ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 
உக்ரைன் எல்லையில் ராணுவத்தை குவித்து வந்த ரஷ்யா தற்போது அதிகாரப்பூர்வமாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் குண்டு மழை பொழிந்து வரும் நிலையில், உக்ரைன் நகரங்களுக்கு ரஷ்ய ராணுவ வீரர்கள் நுழைந்துள்ளனர். இன்று இரண்டாவது நாளாக போர் நடந்து வருகிறது. 
 
உக்ரைனில், இந்தியர்களை பொறுத்தவரை சுமார் 20,000 பேர் இருக்க வாய்ப்புள்ளது. கேரளாவை சேர்ந்த மாணவர்கள் 2,800 பேரும், கர்நாடகாவை சேர்ந்த மாணவர்கள் 1,800 பேரும், தமிழகத்தை சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக 1,500 லிருந்து 3,000 பேர் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. 
 
இவ்வாறு ஒவ்வொரு மாநிலமும் உக்ரைனில் இருக்கக்கூடியவர்களின் தகவல்களை ஒன்றிய அரசிடம் வழங்கி வருகிறது. இதனிடையே, உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களையும், இந்திய மாணவர்களையும் மீட்க நாளை 2 ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments