Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் நீ விமானம் பக்கம் வரவே கூடாது! – கோஸ்வாமியை திட்டியவருக்கு கிடைத்த தண்டனை!

Webdunia
புதன், 29 ஜனவரி 2020 (11:03 IST)
மூத்த பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமியை தகாத வார்த்தைகளால் திட்டிய காமெடி பேச்சாளருக்கு விமான நிறுவனங்கள் பறக்க தடை விதித்துள்ளன.

மும்பையில் இருந்து லக்னோ செல்லும் இண்டிகோ விமானத்தில் தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளரும், மூத்த பத்திரிக்கையாளருமான அர்னாப் கோஸ்வாமி பயணித்து கொண்டிருந்திருக்கிறார். அவர் அருகே வந்த காமெடி பேச்சாளர் குணால் காம்ரா திடீரென கோஸ்வாமியை தகாத வார்த்தைகளால் திட்ட தொடங்கியுள்ளார்.

ஆனால் இதற்கு சற்றும் அதிர்ச்சியடையாத கோஸ்வாமி அமைதியாக காம்ரா திட்டுவதை தனது மொபைலில் பதிவு செய்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து கோஸ்வாமியை தகாத வார்த்தைகளால் பேசிய காம்ராவுக்கு விமானத்தில் பறக்க தடை விதிக்க வேண்டும் என மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரியும் தனது ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.

இண்டிகோ நிறுவனம் தனது விமானங்களில் காம்ரா பயணம் செய்ய 6 மாதங்களுக்கு தடை விதித்துள்ளது. அதை தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனமும் காம்ரா தங்களது விமானத்தில் பறக்க தடை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் ரூ.1.60 கோடி ரொக்கம் பறிமுதல்! பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

ஒரே ஸ்கூட்டியில் 7 சிறுவர்கள் சாகசம்.. ஸ்கூட்டி ஓனருக்கு அபராதம்.. பெற்றோருக்கு எச்சரிக்கை!

அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய பெண் பெங்களூருவில் கைது: குஜராத் ஏடிஎஸ் அதிரடி நடவடிக்கை!

மரணம் என் வாழ்க்கையின் மிக அழகான பகுதி.. 25 வயது சிஏ அக்கவுண்டண்ட் தற்கொலை..!

தென்மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதிகளாக அறிவிக்க வேண்டும்! - பா.ரஞ்சித் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments