ஏர் ஏசியா நிறுவனம் பெங்களூரிலிருந்து செப்டம்பர் 13 ஆம் தேதி பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்தவர்கள், 72 மணி நேரத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் இலவசமாக பயணத்தை மேற்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டங்களால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று, செப்டம்பர் 13ஆம் தேதி பெங்களூரு கெம்பேகௌடா விமான நிலையத்திலிருந்து ஏர் ஏசியா விமானத்தில் பயணிக்க முன்பதிவு செய்தவர்களின் வசதிக்காக அந்நிறுவனம் இலவசப் பயணச்சலுகையை அறிவித்திருக்கிறது.
இன்று, தாங்கள் பதிவு செய்த விமானத்தில் பயணிக்க முடியாதவர்கள் அடுத்த 72 மணி நேரத்திற்குள் தங்கள் பயணத்தை வேறு எந்த நேரத்திலும் மாற்றி அமைத்துக்கொள்ளலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.