Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுப்ரீம் கோர்ட் வரலாற்றில் முதல்முறையாக, AI உதவியுடன் வழக்குகள் விசாரணை

Webdunia
செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (20:14 IST)
சுப்ரீம் கோர்ட் வரலாற்றில் முதல் முறையாக AI தொழில்நுட்பத்தின் மூலம் வழக்குகள் விசாரணை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
AI என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு கருவிகள் மூலம் சுப்ரீம் கோர்ட் வரலாற்றில் முதல்முறையாக வழக்கறிஞர்கள் வாதங்களை நேரடியாக பதிவு செய்யும் வசதி இன்று சுப்ரீம் கோர்ட்டில் தொடங்கி வைக்கப்பட்டது. 
 
தற்போதைய டெக்னாலஜி உலகில் AI என்ற செயற்கை நுண்ணறிவு பல துறைகளில் நுழைந்து வருகிறது. அந்த வகையில் இந்த தொழில்நுட்பம் தற்போது சுப்ரீம் கோர்ட் வழக்குகளை விசாரிக்கும் முறைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த AI வசதியை சுப்ரீம் கோர்ட் நீதிபதி சந்திர சூட் அவர்கள் சோதனையின் அடிப்படையில் இன்று தொடங்கி வைத்தார். வழக்கறிஞர்களின் வாய் வழி வாதங்களின் பிரதிநிதிகளை பதிவு செய்வதோடு அதை இணையத்தில் பகிர்ந்து வழக்கறிஞர்களுக்கும் அந்த பதிவு வழங்கப்படும். AI தொழில்நுட்பம் கோர்ட் உள்பட அனைத்து திட்டங்களிலும் நுழையும் என்று கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments